காலநிலை மாற்றத்தின் தாக்கத்திற்காக இயைபாக்கம் அடைதல் மற்றும் பேரிடர் அபாயக் குறைப்புக்கான கழிவு முகாமைத்துவம்

காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் ஏற்படும் பல்வேறு இயற்கை பேரழிவுகளில், வெள்ளம் தொடர்பான பேரழிவுகளின் தாக்கத்தில் மக்களின் வாழ்வாழ்விற்கு தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணியாக முறையற்ற ரீதியில் கழிவுகளை அகற்றுவதை காட்ட முடியும் ,. பிளாஸ்டிக், பொலிதீன் மற்றும் பிற உக்காத கழிவுகளை முறையான முகாமைத்துவம் இல்லாமல் இயற்கை சூழலுக்குள் முறையற்ற முறையில் அகற்றுவதால் வடிகால் அமைப்புகள் அடைப்பு, வடிகால் வழித்தடங்கள் அடைப்பு போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது. இதனால் மழைநீர் வடிகால் அடைப்பு, சாலைகளில் வெள்ளப்பெருக்கு, போக்குவரத்து இடையூறுகள், அத்துடன் முறையற்ற முறையில் அகற்றப்படும் உக்கும் தன்மை மற்றும் குப்பைகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு நீர் ஆதாரங்களை மாசுபடுத்துதல் பலசந்தர்ப்பங்களில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் என அனைத்து பகுதிகளிலும், தற்போத காணக்கூடிய நிலையாகும். இதன் ஒரு பக்க விளைவாக, பல்வேறு தொற்றுநோய்கள் பரவுதல், பொது வாழ்க்கை சீர்குலைவு மற்றும் சொத்துக்கள் மற்றும் பயிர்களுக்கு சேதம் உள்ளிட்ட பல பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன.

இந்த சூழநிலையின் கீழ், காலநிலை மாற்றத்துடன் கூடிய மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பு திட்டத்தின் கீழ், மேல் மாகாண காலநிலை பிரிவு மூலம் , பாலிந்தநுவர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மரகஹதெனிய விவேகானந்தா தமிழ்க் கல்லூரிக்கு இணைந்து அமைந்துள்ள மொஹொமதியவத்தை தோட்டங்களில் வசிப்பவர்களுக்காக 2024.12.10 ஆந்திகதி கழிவு முகாமைத்துவ திட்டத்தைநடத்தியது. இந்த நிகழ்ச்சியில் உக்கும் மற்றும் உக்காத கழிவுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்த நடைமுறை நடவடிக்கைகள் கொண்ட ஒரு அமர்வும் இடம்பெற்றது, மேலும் இந்த திட்டத்திற்கான வளங்களை மேல் மாகாண கழிவு முகாமைத்து அதிகாரசபையின் களுத்துறை மாவட்ட முகமையாளர் திருமதி நெரஞ்சா ஜெயசேனா மற்றும் உதவி பணிப்பாளர் திருமதி ஆர். சண்முகப்பிரியா ஆகியோர் வழங்கினர்.

பாலிந்தநுவர விவேகானந்தா தமிழ் வித்தியாலய மைதானத்தில் கழிவுகள் குவிவதைத் தடுப்பதற்கான தீர்வை வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும், மேலும் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக பாலிந்தநுவர பிரதேச சபையுடன் இணைந்து நீண்டகால வேலைத்திட்டத்தை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.